காற்றின் கவலை (கவிதை)
| அவதரிப்பு முதல் தொட்டு அன்பால் அரவணைக்கும் என்னை… கண்டு கொள்ளாமலே கொல்ல நினைக்கிறீர்!! நீர் நாட்டில் நலமாய் சிறக்க பிராண வாயு தந்து பிரயாணிக்கச் செய்ததை மறந்தீரோ…!! கரியமில வாயு கொண்டு கழுத்தறுக்கிறீர்..! இதனை கண்டுணர்ந்து யாரும் கதையளந்தால் உடன் மறுக்கிறீர்..! என்னை மாசாக்கின் உன்னை தூசாக்க எத்தனையோ உண்டு கேளீர்! சூறாவளியென்ன? சார்சும் அதிலொரு வகையே! ஆனாலும், மனிதர்கள் நன்றி மறப்பதொன்றும் புதிதில்லை என்பதனால் இன்னும் பூமியிலே உள்ளுர புழுங்கித் தவிக்கின்றேன்..!! 2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி தினகரன் பத்திரிகையில் பிரசுரமான என் கவிதை Labels: Poem |

Comments on "காற்றின் கவலை (கவிதை)"
post a comment